கும்பகோணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

கும்பகோணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கும்பகோணம் ஆகஸ்ட் 27 கும்பகோணம் ஷோஸ்ட் லயன்ஸ் சங்கம், லியோ கிளப்  பெண்கள் கல்லூரி, சாருபாலா ஜுவல்ஸ் நிறுவனத்தார் நிதியுதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் ஆகியன இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.


ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சாருபாலா ஜுவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லயன் ஆர் பாலாஜி துவங்கி வைத்தார். இதில் லயன்ஸ் சங்க தலைவர், செயலாளர்,பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்  அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் நோயாளிகளைப் பரிசோதித்து ஆலோசனை வழங்கினாா்.


இந்த முகாமில் 572 போ் பங்கேற்றனா், 119போ் கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக தோ்வு செய்யப்பட்டு,  இன்று பேருந்தில்  மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தொடர்ந்து வருகின்ற புதன்கிழமை அன்று கண் அறுவை சிகிச்சைக்காக 272 பேர் செல்ல உள்ளனர். 20 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.


இந்த மாத முகாமில் OP-572 IP-391. கடந்த மாதம் 30.08.2023  அறுவை   சிகிச்சை செய்துகொண்ட 446 நபர்களில் இன்று 400 நபர்களுக்கு மறுபரிசோதனை செய்யப்பட்டு சுமார் 254 நபர்களுக்கு  இலவச கண்ணாடி வழங்கப்பட்டது, இன்றைய முகாமுக்கான ஏற்பாடுகளை காலை முதல் மாலை வரை கலந்துகொண்டு பணியாற்றிய அனைத்து அரிமா நண்பர்களுக்கும்  சிறப்பாக பணி செய்த  லியோ மாணவிகளுக்கும், நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/