மதுரை அடுத்த வாடிப்பட்டியில் கருணாநிதி நினைவு நாள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

மதுரை அடுத்த வாடிப்பட்டியில் கருணாநிதி நினைவு நாள்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 5ஆம் ஆண்டு நினைவு நாள் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அனுசரிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் எம். எல். ஏ., தலைமை தாங்கி கருணாநிதி உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 


பேரூர் செயலாளர் மு. பால் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள்பால.ராஜேந் திரன், பசும்பொன்மாறன் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் திருவேடகம் சிபிஆர் சரவணன் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் அயூப்கான், பேரூராட்சி துணைத் தலைவர்கள் கார்த்திக் லதா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா. பிரகாஷ் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொது குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி ஸ்ரீதர், மாவட்ட துணைச் செயலாளர் ரோகிணி, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், ராம் மோகன், மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி இளைஞரணி வெற்றிச்செல்வன் பால் கண்ணன் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா.மாணவரணி எஸ் ஆர் சரவணன் மேலக்கால் பன்னீர்செல்வம் ஒன்றிய பிரதிநிதி எல்.எஸ். அய்யாவு, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பாலசுப்பிரமணியம் மேலக் கால் ராஜா ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி அமைப்பு சாரா அணி அமைப்பாளர் அய்யங்கோட்டை விஜி, எம் எஸ் முரளி, வினோத், சங்கங்கோட்டை சந்திரன் ரவி உள்பட பலர் கலந்து கொண்ட னர்.முடிவில் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் ஜி. பி. பிரபு நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/