திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆண்டவர் கல்லூரி மாணவர்கள் நாளிதழ் எரித்து போராட்டம் காலை உணவு திட்டம் குறித்து கொச்சை செய்திக்கு கண்டனம்
மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டத்தையும், பள்ளி மாணவர்களையும் மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிட்டுள்ள நாளிதழை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.இதனை கண்டித்து அந்த நாளிதழை புறக்கணிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆண்டவர் கல்லூரியின் முன்பாக நாளிதழ் எரித்து போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர் . போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் தீபக்ராஜ் கல்லூரி கிளை தோழர் கவின்குமார் முத்துமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக