செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்_கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அதன் அடிப்படையில் நந்திவரம் கூடுவாஞ்சேரி 24வது வார்டுக்கு உட்பட்ட லால் பகதூர் சாஸ்திரி தெருவில் 62 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வெட்டுடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
சாலை அமைக்கும் பணி துரிதமாக முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது, நந்திவரம்_கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டு தார் சாலையை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற துணைத் தலைவர் ஜி கே லோகநாதன் 24வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சதீஷ் மற்றும் நகராட்சி செயற்பொறியாளர் வெங்கடேசன் நகராட்சி ஆணையர் தாமோதரன் சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திமுகவின் முன்னோடி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக