தாராபுரம் அருகே பள்ளி மாணவ மாணவிகள் இடையே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது... - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

தாராபுரம் அருகே பள்ளி மாணவ மாணவிகள் இடையே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தளவாய்பட்டிணம் ஊராட்சியில் அலங்கியம் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இப்பேரணியை தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் கொடி அசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.பேரணி தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய கடைவீதி வழியாக தளவாய்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்து மீண்டும் பள்ளி வளாகம் சென்று முடிவடைந்தது. பேரணியில் பள்ளி மாணவ மாணவியர்கள் போதைப்பொருள் இளைஞர்கள் வாழ்க்கையில் எதிர்கால கேள்விக்குறியாக உள்ள கஞ்சா, பான்பராக், குட்கா மற்றும் புகையிலை பொருள்களை பயன்படுத்த மாட்டோம், அதனை ஒழிக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் கோஷமிட்டவாறு சென்றனர்.


அப்போது அலங்கியம் காவல் சார்பு ஆய்வாளர் சுந்தரராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் குப்புசாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் காவலர்கள் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/