திருப்பூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பியை கொச்சைப்படுத்தி அதிமுகவினர் பேசியதாக திருப்பூர் மகளிர் அணியினர் போலீசில் புகார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

திருப்பூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பியை கொச்சைப்படுத்தி அதிமுகவினர் பேசியதாக திருப்பூர் மகளிர் அணியினர் போலீசில் புகார்

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பியை கொச்சைப்படுத்தி அதிமுகவினர் பேசியதாக திருப்பூர் மகளிர் அணியினர் போலீசில் புகார்! மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பியை கொச்சைப்படுத்தியும், தனிப்பட்ட முறையில் ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் பேசி பாட்டு பாடிய நபர்கள் மீதும் அதனை ரசித்து மேலும் உற்சாகப்படுத்திய எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் மாநாடு நிர்வாகிகள், நேரடி ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சி மற்றும் அதிமுக தொண்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் உமா மகேஸ்வரி தலைமையில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆனந்தி அவர்கள் சார்பாகவும், திருப்பூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் பார்த்திபன், மாவட்ட துணைச் செயலாளர் நந்தினி, மாநகர துணைச் செயலாளர் தேவி முருகேசன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர்கள், மகேஸ்வரி கௌரி, தொண்டரணி அமைப்பாளர் சுகாசினி, ஆகியோர் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்கள்..


மாவட்ட செய்தியாளர்
அ. காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/