ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதுமலை வருகை:மசினகுடியில் ஹெலிகாப்டர் ஒத்திகை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதுமலை வருகை:மசினகுடியில் ஹெலிகாப்டர் ஒத்திகை

 


ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதுமலை வருகை:மசினகுடியில் ஹெலிகாப்டர் ஒத்திகை



ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை(சனிக்கிழமை) முதுமலை வருகிறார். அவரது வருகையையொட்டி மசினகுடியில் ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது.



ஜனாதிபதி திரவுபதி முர்மு, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு நாளை(சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு வருகை தருகிறார். அதன்படி அவர், டெல்லியில் இருந்து காலை 11.30 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் முதுமலை அருகே மசினகுடியில் உள்ள ஹெலிபேடுவிற்கு வந்திறங்குகிறார்.


தொடர்ந்து காரில், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அங்கு ஆதிவாசி மக்கள் மற்றும் பாகன்களை சந்திக்கிறார். வளர்ப்பு யானைகளை பார்வையிடுகிறார். பின்னர் 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தில் இடம் பிடித்த பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி ஆகியோரை சந்தித்துவிட்டு மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார்.


ஜனாதிபதி வருகையையொட்டி மசினகுடி ஹெலிபேடு, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், காரில் செல்லும் வழிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வித்யா, அருண் மற்றும் ஜனாதிபதி சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து முதுமலை, மசினகுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வனத்துறை மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் நேற்றுமுன்தினம் முதல் மூடப்பட்டன. மேலும் நாளை வரை அனைத்து விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை தங்க அனுமதிக்கக்கூடாது என்று விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டனர்.



இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மைசூரில் இருந்து மசினகுடிக்கு ஹெலிகாப்டரில் வருவதையொட்டி, நேற்று காலை 9.30 மணிக்கு 2 ஹெலிகாப்டர்கள் தனித்தனியாக இயக்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது மைசூரில் இருந்து மசினகுடி ஹெலிபேடுவுக்கு 2 ஹெலிகாப்டர்கள் தனித்தனியாக இயக்கப்பட்டு வந்து மீண்டும் திரும்பி செல்வதன் மூலம் ஒத்திகை நடைபெற்றது.



இதையொட்டி அப்பகுதியில் பொதுமக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து ஹெலிகாப்டர் ஹெலிபேடு மற்றும் வளர்ப்பு யானைகள் முகாம் பகுதியில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/