வேலூர் மாவட்டம் கேவிகுப்பம் அடுத்த மேல்மாயில் பலவாநத்தம் ஊரைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தன் மனைவி சாந்தி என்பவரை இருசக்கர வாகனத்தில் ஜாதகம் பார்ப்பதற்காக குடியாத்தம் அழைத்து வருகிறார் அப்போது திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி அருகில் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சாந்தி(56) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்த அரசு மருத்துவமனையில் நகர காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக நகர போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக