உதகை நகர பகுதியில் இயங்கக்கூடிய ஆட்டோக்களுக்கு ( மாநாடு அழைப்பிதழ் ஸ்டிக்கர்) ஒட்டும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது
மதுரையில் நடக்கும் அதிமுக., பொன்விழா மாநாடு குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பேரணி மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
வரும் 20ம் தேதி மதுரையில் அதிமுக., பொன்விழா எழுச்சி மாநாடு நடக்கவுள்ளது. இதற்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அதிமுக.,வினர் செல்ல திட்டமிட்டுள்ளனர்
நீலகிரி மாவட்டத்தில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக.,வினர் செல்லதிட்டமிட்டுள்ளனர்
.இந்நிலையில், இந்த மாநாடு குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பேரணி மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை வகித்து ஆட்டோ பேரணியை துவக்கி வைத்தார்.
உதகை நகர கழக செயலாளர் சண்முகம் அவர்களுடைய ஏற்பாட்டில் உதகை நகர பகுதியில் இயங்கக்கூடிய ஆட்டோக்களுக்கு ( மாநாடு அழைப்பிதழ் ஸ்டிக்கர்) ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் முன்னாள் அவைத் தலைவர் தேனாடு லட்சுமணன் ,பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் ,பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம் பாபு, நகர இளைஞர் அணி செயலாளர்கள் விசாந்த் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராஜகோபால் எம்ஜிஆர் நகர் மன்ற தலைவர் ஜெயராமன் நகர மன்ற உறுப்பினர் லயோக்குமார் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் நகர பொறுப்பாளர்கள் கிளைக் கழக செயலாளர் நகர மன்ற உறுப்பினர்கள் மகளிர் அணி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக