கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது பெங்களூரில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த அரசு பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி படைவீட்டு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் விஜயபாபு வயது 45 என்பவர் பெங்களூரில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது, இதை எடுத்து விஜய் பாபுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர், மேலும் அவரிடம் இருந்த 300 பாக்கெட் புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக