தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களின் 61வதுபிறந்த நாளை முன்னிட்டு பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.ரபீக் தலைமை தாங்கினார்.நகர செயலாளர் ஜோதி முருகன், ஒன்றிய செயலாளர் ஆண்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், தமிழ்பாண்டியன், ஆண்டவர், கோமதி, தளபதி, கருத்தையன், சேகுவேரா, பஞ்சவர்ணம், முருகன், சையது, ஜாபர்சேட், ஈஸ்வரி, செல்வராஜ், கைலாசம், முருகன், தமிழருவி, ரமேஷ், ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தாய்மண், ஆட்டோ நிலையம், தென்கரை பேரூராட்சி, காலேஜ் விளக்கு, கைலாச பட்டி, வடுகபட்டி, பொம்மிநாயக்கன்பட்டி எருமலை நாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, கெங்குவார்பட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் விசிக மாவட்டச் செயலாளர் ரபீக் தலைமையில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக