திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கீழ் புதுப்பாக்கம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48). கட்டிட மேஸ்திரி, இவர் இன்று அதே பகுதியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது வீட்டு மாடிக்கு கொண்டு செல்ல அலுமினிய மட்டக்கோலை தூக்கி சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள மின் கம்பியில் மட்ட கோல் பட்டுள்ளது. அதிலிருந்து மின்சாரம் தாக்கி மகேந்திரன் தூக்கி வீசப்பட்டார்.
 

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சக ஊழியர்கள் மயங்கி கிடந்த மகேந்திரனை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து செய்யாறு போலீசில் மகேந்திரன் மகன் அருண் புகார் அளித்தார். 


அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/