தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசுபொது மருத்துவமனையில் தலைமை மருத்துவர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வி ராமசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கே ஆர் தர்மராஜன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் எம் முகமது ரிசா, எம் மீரா மொய்தீன், என் அப்துல் அலி, ஏ ஐ டி யு சி நிர்வாகி எ.நாகராஜ் மற்றும் மருத்துவர்கள், சித்தா மருத்துவர், செவிலியர்கள், பணியாளர்கள் தாய்மார்கள் பங்கேற்றனர்
தாய்ப்பாலின் சிறப்பு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து மருத்துவர்கள் விளக்கிப் பேசினார்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள்தொகுப்பு வழங்கப்பட்டது.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர் புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக