நாடு முழுவதும் 77வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராம்குமாருக்கு சிறப்பாக பணியாற்றியமைக்கான தேசிய நற்செயல் விருது மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் காப்பீடு திட்ட பணிக்காக சிறந்த குடியரசு தின விருது, சிறந்த மருத்துவமனையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கான விருதுகளையும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா வழங்கினார்.
இதில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் 23 லட்சம் மதிப்பீட்டில் காப்பீடு திட்டங்களை வழங்கிய சிறப்பாக சேவையாற்றிய மருத்துவர்களுக்கும் பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக