திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் முருகேஷ் தேசிய கொடியை ஏற்றினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் முருகேஷ் தேசிய கொடியை ஏற்றினார்.


திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் முருகேஷ் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அவர் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.                   


திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப் படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 



பின்னர் அவர் திறந்த வெளி வாகனத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுடன் போலிசாரின் அணி வகுப்பினை பார்வையிட்டார். தொடர்ந்து போலீசார் மற்றும் சாரணர் இயக்கத்தினரின் அணி வகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். தியாகிகளின் குடும்பத்தினரை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கௌரவித்தார்.



முன்னதாக சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்கள் மற்றும் தேசிய கொடி நிற பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து காவல்துறையின் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.                  அப்போது காவல் துறையில் உள்ள மோப்ப நாய்கள் போலீசாருக்கு எவ்வாறு பயன் உள்ளதாக பணியாற்றுகிறது என்பது குறித்தும் காவல் துறையில் மோப்ப நாய்கள் எவ்வாறு செயல்படுகிறது குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். 



தொடர்ந்து பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்கள் தேச பற்றை ஊக்குவிக்கும் பாடல்களுக்கு நடனமாடினர்.                 இதனையடுத்து வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, கூட்டுறவு துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்பில் ரூ.1 கோடியே 80 லட்சத்து 32 ஆயிரத்து 846 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 191 பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.                 



தொடர்ந்து கலெக்டர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி புரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 592 பேர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.                நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், மாவட்ட தடகள சங்க தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/