தூத்துக்குடி - ஆத்தூர் பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி - ஆத்தூர் பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று (14.08.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்காணி ரவுண்டானா அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஆத்தூர், முக்காணி பகுதியை சேர்ந்த பூவன் (எ) அய்யாதுரை மகன் மாரியப்பன் (எ) முண்டன் (36) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.



உடனே மேற்படி போலீசார் மாரியப்பன் (எ) முண்டனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி கைது செய்யப்பட்ட மாரியப்பன் (எ) முண்டன் மீது ஏற்கனவே ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/