விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தீக்குளித்த பெண் இறப்பு உறவினர்கள் சாலை மறியல் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தீக்குளித்த பெண் இறப்பு உறவினர்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, இளம் பெண் தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த நரசிங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத், 30; வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.


இவரது மனைவி லட்சுமி, 26;இவர், கடந்த 3ம் தேதி இரவு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவர், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் லட்சுமி தற்கொலை செய்து கொண்டார் எனவும், அவரை கைது செய்ய வேண்டும் என கூறி, அவரது உறவினர்கள் நேற்று இரவு 8:00 மணியளவில் நரசிங்கனுாரில், விழுப்புரம் செஞ்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கஞ்சனுார் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், இரவு 8:30 மணியளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/