திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு பே கிரி அவர்கள் மாணவ ,மாணவிகளுக்கு உணவுகளை வழங்கி துவக்கி வைத்தார். உடன் இந்நிகழ்வில் திமுக ஒன்றிய கழக செயலாளர்கள் த செந்தில்குமார், அ ஏழுமலை, த மனோகரன் மற்றும் நகர செயலாளர் அன்பழகன் மற்றும் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
-செங்கம் செய்தியாளர் கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக