நெமிலியில் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

நெமிலியில் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிப்பு.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றியம் மற்றும் நெமிலி பேரூர் கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நெமிலி பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, நடைபெற்றது, இதில் திமுகவின் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான. பெ.வடிவேலு தலைமையில் நடைபெற்றது. 


முன்னதாக நெமிலி அண்ணா சாலையில்  திமுகவினர் மௌன ஊர்வலமாக சென்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஆகியோர் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், திமுகவின் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளரும், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான. பவானி வடிவேலு, நெமிலி பேரூர் செயலாளர். ஜனார்த்தனன், நெமிலி பேரூராட்சி மன்றத் தலைவர். ரேணுகாதேவி சரவணன், நிர்வாகிகள். புருஷோத்தமன், பாண்டியன், அரிகிருஷ்ணன், சங்கர், பாபு, வழக்கறிஞர். கார்த்திகேயன், சுகுமார், சேகர், சரவணன், கோபி, ஹரீஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/