தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கொண்டுவந்துள்ள காலை உணவு திட்டத்தை இழிவுபடுத்தி செய்திகளிட்ட தினமலரை கண்டித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அதில் ஒரு பகுதியாக விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் ப. அன்பரசு தலைமையில் வளவனூர் நான்கு முனை சந்திப்பில் தினமலர் நாளிதழை தீயிலிட்டு செய்திதாளுக்கு இதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதில் திமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் செல்வகுமார், தேவன், அபுபக்கர், ராஜேஷ், அருண் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக