அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு மூன்று பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் அரக்கோணத்தை சேர்ந்த குருபிரசாத், கௌதம், ஜெகன், பன்னீர்செல்வம் ஆகியோரை அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் பாரதி தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இவர்களின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி இ.ஆ.ப., ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதன் பேரிலும் மேற்கண்ட நபர்கள் குண்டர் தடுப்பு காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக