மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக, திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலகம், முரசொலி மாறன் வளாகத்தில், தலைமைக் கழகத்தால் அணிகளின் சார்பில் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்து அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் க.நடராசன், தெற்கு மாநகர செயலாளர் TKT மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளர்; மேயர் ந.தினேஷ்குமார், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் உமாமகேஸ்வரி, இளைஞரணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ம.சூர்யா, மாணவர் அணி அமைப்பாளர் து.கோபிநாத், மகளிர் அணி அமைப்பாளர் ப.கலைச்செல்வி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஆ.ஆனந்தி, மாவட்ட துணை செயலாளர்கள் சு.குமார், ஜி.கே.நந்தினி, மற்றும் சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக