திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணியினை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் டி.சாமுடி, கே.சாம்மண்ணன், வெண்மதி சிங்காரவேலன், டி.தேவராஜி, முருகேசன், திருப்பதி, செந்தில்குமார், வெங்கடேசன், சிவாஜி, எ.கே.தினகரன் மோகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக