ராணிப்பேட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மூத்த சகோதரி பானுமதியின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பானுமதியின் திருவுருவப்படத்திற்கு ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளர் சீம ரமேஷ் கர்ணா மாலை அணிவித்து மலர் தூவி வணங்கி வீரவணக்கம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் மதிய உணவு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மண்டல துணைச் செயலாளர் சோ. தமிழ், முன்னாள் மாவட்ட செயலாளர் குண்டா என்கிற சார்லஸ்,பெல் சேகர், உள்ளிட்ட மாநில மாவட்ட தொகுதி ஒன்றிய முகாம் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக