இராமநாதபுரத்தில் தென்மண்டல வாக்குச் சாவடி பாக முகவர்கள் (BLA-2) பயிற்சிப் பாசறைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இப்பிரம்மாண்ட நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் சிவகங்கை மாவட்ட செயலாளர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களும், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்களும், மானாமதுரை சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடி பாக முகவர்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட வாக்குச் சாவடி பாக முகவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்களும், மாவட்ட செயலாளர்களும், நாடாளுமன்றம் உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும், நகர் பேரூர் ஒன்றிய வாக்குச் சாவடி பாக முகவர்கள், திமுக கழக முன்னோடிகளும், திமுக நிர்வாகிகளும் மற்றும் திமுகவின் கடைக்கோடி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக