செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில் ஐ.சி.எம் திருச்சபை மற்றும் பாரத் மருத்துவ மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் கலந்து கொண்டு சிறப்பித்து வாழ்த்து தெரிவித்தார்.
உடன் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன், ஏசிடிஎஸ் நிறுவனத் தலைவர் தேவன்பு மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் மருத்துவர்கள், திருச்சபை நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக