உண்ணாவிரதம் போராட்டம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

உண்ணாவிரதம் போராட்டம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை 
மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர். ஏ. கே. சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் நீட்தேர்வு குறித்து மாவட்ட இளைஞர் அணி, மாவட்ட மாணவர் அணி, மாவட்ட மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதில் கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர். ஆர். வினோத் காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட பொருளாளர். ஏ.வி.சாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர். க.சுந்தரம், மு.கண்ணய்யன், மாவட்ட துணை செயலாளர்கள்.  மு.சிவானந்தம், குமுதா, துரை மஸ்தான், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/