புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தனிநபர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி அதனை அகற்ற வேண்டும் என திருமயம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் மனு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தனிநபர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி அதனை அகற்ற வேண்டும் என திருமயம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் மனு.


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சந்தைப்பேட்டை மேலத்தெரு வீதியில் வெட்டிவயல் ஆயக்கட்டுக்கு சொந்தமான பாரம்பரியமாக உள்ள மழைநீர் வரத்து வாரியை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாகவும் அதனை சொந்த பயன்பாட்டிற்காக சாலை அமைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 


இதனால் வெட்டிகண்மாய்க்கு வரவேண்டிய மழைநீர் தடுக்கப்படுவதால் வெட்டிவயல் ஆயக்கட்டில் உள்ள சுமார் 300 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கரையான்பட்டி, வெள்ளுக்குடிப்பட்டி, ஒசுவான்பட்டி கிராமங்களில் வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.எனவே தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி சீரமைத்து தருமாறு பொதுமக்கள் திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரிடம் மனு அளித்தனர்.


-எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/