விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, முன்னாள் அமைச்சர் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்..... - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, முன்னாள் அமைச்சர் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.....

சிவகாசி அருகே, முன்னாள் அமைச்சர் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.....



சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது வீட்டின் முன்பு தேசியக்கொடி ஏற்றினார். இந்திய நாட்டின் 77வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும், வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனையடுத்து பலரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றியுள்ளனர். முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது வீட்டின் முன்பு தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் அங்கிருந்த பொது மக்களுக்கு முன்னாள் அமைச்சர் இனிப்புகள் வழங்கினார். சுதந்திர தின கொண்டாட்டத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/