மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

இந்திய திருநாட்டின் 77வது சுகந்திர தினத்தை முன்னிட்டு மானாமதுரை சட்டமன்ற அலுவலகத்தில் இன்று காலை மாண்புமிகு  முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்.


பின்னர் பொதுமக்களுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இனிப்புகளை வழங்கி சுதந்திர தின நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.


இந்நிகழ்வில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த முன்னோடி திரு. ஏ. ஆர். பி. முருகேசன் அவர்கள், நகர் கழக செயலாளர் திரு. பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் திரு. துரை ராஜாமணி, கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் திரு. தமிழரசன், நகர அவை தலைவர் திரு. ரவிச்சந்திரன், நகர் 2வது வார்டு கவுன்சிலர் திருமதி. இந்துமதி திருமுருகன்,18 வது வார்டு செயலாளர் திரு. ராஜேந்திரன், 21வது வார்டு கவுன்சிலர் செல்வம், 26 வது வார்டு கவுன்சிலர் செல்வம், இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. பரு சுப்பிரமணி, 7வது வார்டு வட்ட செயலாளர் சி. பி. மூர்த்தி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி. வளர்மதி, நகர் பொறியாளர்கள் அணி திரு சந்தனராஜ், திரு செங்கிஷ் கான், திரு சசி பிரசாத், நூலக அரசுத் துறை அதிகாரிகள், பத்திரிகை நண்பர்கள், பொது மக்கள் மற்றும் கழக தொண்டர்கள் திரலாக கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/