திருப்பத்தூர் துரைசாமி சாலையில் உள்ள விஎஸ்வி நகராட்சி துவக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்கள் வழங்க தயார் செய்யப்படும் உணவை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்ட ஆய்வு கொண்டார்
தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை வருகின்ற 25 தேதி முதல் தொடங்க இருப்பாதல்
அந்த திட்டத்தை எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்து திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட துரைசாமி சாலை பகுதியில் உள்ள வி எஸ் வி நகராட்சி துவக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்குவதற்கு தயார் செய்யப்பட்டிருந்தன அதனை இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தயார் நிலையில் உள்ள உணவுகளை 15 பள்ளிகளில் பயிலும் 667 மாணவ மாணவிகளுக்கு இந்த உணவுகளை அனுப்புவதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு மற்றும் அரசு அதிகாரிகள் , ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் எனபலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக