தமிழ்நாடு அஷ்டடோ அகடா இந்திய தற்காப்பு கலை கழகம் நடத்திய மாநில அளவிலான இரண்டாவது போட்டியானது பிரிஸ்ட் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்து வீரர் வீராங்கனைகளுக்கு சிறப்புரையாற்றினார்.
இப்போட்டியானது இக்கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் திருமதி எஸ் புவனேஸ்வரி மற்றும் சேர்மன் பி செந்தில்நாதன் அவர்களின் முன்னேற்பாட்டின்படி நடைபெற்றது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட வீர வீராணங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டார்கள். இதில் லக்ஷிதா, ராகுல், கீர்த்தி ராஜன், கார்த்தி ரோஷன் ஆகியோர் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
இதில் முதலிடம் பிடித்த வீராங்கனைகள் அக்டோபர் மாதம்டெல்லியில் நடைபெறக்கூடிய தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். தஞ்சையின் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீராங்கனைகளும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக