மதுரை நகரில் பலத்த மழையால் குளம் போல மாறிய மாநகராட்சி சாலைகள். கழிவு நீர் கால்வாய் பெருக்கெடுப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

மதுரை நகரில் பலத்த மழையால் குளம் போல மாறிய மாநகராட்சி சாலைகள். கழிவு நீர் கால்வாய் பெருக்கெடுப்பு.

மதுரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாக காணப்பட்டாலும், கடந்த இரு நாட்களாக மாலை நேரங்களில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பலத்த காற்றுடன் பெய்து வருகிறது.


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், தேனூர், விளாங்குடி திருமங்கலம், மேலூர், அழகர் கோவில், காஞ்சரம் பேட்டை, ஊமச்சிகுளம், திருப்பாலை, அரசரடி, ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம், துவரிமான், குலமங்கலம் ஆகிய பகுதிகளில், பலத்தை மழை பெய்தது. தேனூரில் பெய்த மலையால் சில இடங்களில் மரங்கள் தரையில் சாய்ந்தன.


மதுரை நகரில் எஸ் எஸ் காலனி, அண்ணா நகர், மேலமடை, கோமதிபுரம், ஜூபிலி டவுன், மருது பாண்டியர் தெரு, காதர் மொய்தீன் தெரு ,வீரவாஞ்சி தெரு, அன்பு மலர் தெரு, சௌபாக்கியா விநாயகர் கோவில் தெரு ஆகிய தெருக்களின் கால்வாய் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மழை நீரானது குளம் போல தேங்கியுள்ளன. மேலும், பலத்த மழையால் மதுரை நகரில் முனிச்சாலை, தெற்கு வாசல், குயவர் பாளையம் மகால் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் கழிவு நேரானது ஆறு போல பெருக்கெடுத்து ஓடின . மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர், கவுன்சிலர்கள் பார்வையிட்டு, தெற்கு வாசல், முனிச்சாலை, மகால் வடம் போக்கி தெரு பகுதிகளில் தேங்கும் கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆகவே, மதுரை மாநகராட்சி நிர்வாகம், மதுரை நகரில் கழிவுநீர் கால்வாயை சீரமைத்து மழை நீர் செல்வதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மதுரை நகரில் உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடத்தும், வார்டுகள் தோறும் சாலைகள் சீரமைப்பு ,வடிகால் வசதிகள், மின்விளக்கு வசதிகள் சரிவர செய்யப்படவில்லை என, இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/