திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் திமுகவினர் க.செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலரஞ்சலி!. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் திமுகவினர் க.செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலரஞ்சலி!.

மறைந்த முன்னால் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுகவின் தலைவருமாகிய கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட செயலாளருமாகிய க.செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில் திருப்பூரில் பல்வேறு இடங்களில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கலைஞர் கருணாநிதி திருவுருவப்படம் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 


திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணா பெரியார் அண்ணா திருவுருவச் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு அங்கு மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர் இதைத் தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அலங்கரிக்க பட்ட மேடையில் இருந்த கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 


இந்த நிகழ்வுகளில் தெற்கு மாநகர செயலாளரும் தொ.மு.ச மாநில துணைச் செயலாளருமான டி. கே. டி .மு. நாகராசன், மாநகர செயலாளரும், மரியாதைக்குரிய மேயருமாகிய ந. தினேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். துணை மேயர் பாலசுப்ரமணியம் மண்டல தலைவர்கள் தம்பி கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி, மாமன்ற கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பி ஆர் செந்தில்குமார், செந்தூர் முத்து, இளைஞர் அணி தெற்கு மாநகர அமைப்பாளர் எம். எஸ். ஆர்.ராஜ் , முன்னாள் கவுன்சிலர் சிவபாலன் ,திமுக நிர்வாகி கேபிள் விஜய், இந்திய கம்யூனிஸ்ட், ம.திமுக கவுன்சிலர்கள், மற்றும் திமுக மாவட்ட மாநகர ஒன்றிய பகுதிகளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/