திருப்பத்தூர் மாவட்டத்தில் பச்சூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் பச்சூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

பச்சூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 8 வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சியில் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர் 

இந்நிலையில் பச்சூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி ஆகியோர் சரியான முறையில் நிர்வாகத்தை நடத்தவில்லை எனவும் மேலும் ஊராட்சி நிர்வாகத்தில் சார்பில் டெண்டர் விடுவதை ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை 

மேலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது ஊராட்சி நிர்வாகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் எவ்வளவு அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என இதுவரை கணக்கு வழக்குகள் தெரிவிக்கப்படவில்லை 

என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பச்சூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சந்தோஷ்குமார், சிவகுமார், தம்பிதுரை, மகாலட்சுமி, இளவரசன், சிதம்பரம், லிங்கம்மா, மீனா, ஆகிய 8வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சம்பவம் அறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் பச்சூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வார்டு உறுப்பினர்களே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/