திருப்பூரில் ஐஏஎஸ் அதிகாரி செயலால் சாலையோர வியாபாரிகள் இன்ப அதிர்ச்சி! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

திருப்பூரில் ஐஏஎஸ் அதிகாரி செயலால் சாலையோர வியாபாரிகள் இன்ப அதிர்ச்சி!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலை ஓர வியாபாரிகள் மத்திய அரசு வழங்கும் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் கடன் பெற வருகின்ற 10 ம் தேதி மாநகராட்சி மைய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 


விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப ., துண்டறிக்கை களை வழங்கினார். ஒரு ஐஏஎஸ் அதிகாரி சாதாரண நிலையில் உள்ள சாலை ஓர வியாபாரிகளான தங்களிடம் துண்டறிக்கை கொடுத்தது இன்ப அதிர்ச்சியை கொடுப்பதாக சாலையோர வியாபாரிகள் கூறினர். 


இந்த நிகழ்வில் மாநகர நல அலுவலர் மரு.கௌரி சரவணன், நகர திட்டமிடுனர் அலுவலர் எஸ் இளங்கோவன் உள்பட பலர் இருந்தனர். 


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/