மானாமதுரை அன்னியேந்தலில் புதிய அங்கன்வாடி மற்றும் மின்மாற்றியை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

மானாமதுரை அன்னியேந்தலில் புதிய அங்கன்வாடி மற்றும் மின்மாற்றியை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் வாகுடி ஊராட்சி அன்னியேந்தல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 11.97 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் திறந்து வைத்தார்கள். பின்னர் அதே பகுதியில் அதிகரித்து வரும் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மெகாதிறன் கொண்ட புதிய மின்மாற்றியையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி லதா அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் திரு அண்ணாதுரை, வாகுடி ஊராட்சி மன்ற தலைவர் திரு மாயாண்டிசாமி, து. தலைவர் திரு முத்தையா, வாகுடி கிளை செயலாளர் திரு வேலுசாமி, வாகுடி காலணி கிளை செயலாளர் திரு ராஜேந்திரன், அன்னியேந்தல் கிளை செயலாளர் திரு மணிகண்டன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு முஜிப் ரகுமான், மேலப்பசலை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சிந்துஜா சட்டையப்பன், மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி முருகவள்ளி தேசிங்குராஜா, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் திரு புவியரசு, கீழப்பசலை கிளைச் செயலாளர் திரு சிவா, அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர் பெருமக்கள், குழந்தை செல்வங்கள், ஊர் பொதுமக்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடிகளும் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/