கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சேலம் நோக்கி செல்லும் சாலையில் வெப்பாலம்பட்டி என்ற பகுதியில் அதிகாலை நேரத்தில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் பகுதிக்கு பழைய பேப்பர் லோடு ஏற்றி சென்ற வாகனம் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓமலூர் பகுதியைச் சேர்ந்த பிரபு வயது 38 என்ற நபர் உயிர் தப்பினார் அருகில் இருந்த நபர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த பொருட்களை மாற்று வாகனத்தில் மாற்றும் பணியில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் அதிகாலை நடந்த விபத்து இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக