ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடலில் முன்னாள் எம்.எல்.ஏ., ஜலபிரதர்ச்சனம் செய்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடலில் முன்னாள் எம்.எல்.ஏ., ஜலபிரதர்ச்சனம் செய்தார்.

ஆடி அமாவாசை அக்னி திருத்த கடல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று ராமேஸ்வரம் அக்கினி தீீர்த்த கடலில் சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  எம்.வி கருப்பையா ஜல பிரதட்சணம் செய்தார்.


அப்போது அவர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது :- கடை கோடி தொண்டனுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம் அண்ணா திமுக தீய சக்தி விரட்டவும் எளியவர்கள் வளர வேண்டும் என்பதற்காக புரட்சித் தலைவர் உருவாக்கிய இயக்கம் அந்த இயக்கத்தை கண் இமைகள் கட்டிக் காத்து இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கமாக உருவாக்கி மக்களால் நான் மக்களுக்காக நான் என்று வாழ்ந்த தலைவி அம்மா மூன்றாம் தலைமுறையாக பேரியக்கத்திற்கு பொதுச்செயலாளராக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நாலரை ஆண்டு காலம் நல்லாட்சி செய்த எடப்பாடியார் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்பதற்காக இந்த பிரார்த்தனை இந்தப் பிரார்த்தனையோடு தமிழகத்தின் இரண்டாம் தலைநகர் மதுரை அந்த மதுரையில் வீர வரலாற்றில் வெற்றி பொன்விழா எழுச்சி மாநாடு 25 லட்சம் பேர் வருவதற்கு ஏதுவாக தென் மண்டல தளபதி ஓய்வறியா உழைப்பாளி மரியாதைக்குரிய ஆர் பி உதயகுமார் முன்னாள் அமைச்சர் அவருக்கு கீழ் பணியாற்றுவது என் போன்றது கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். 



இந்த மாநாடு கட்டுப்படுத்த முடியாத விலைவாசி ஏற்றம், கள்ளச்சாராயம், சாதிக் கலவரம், வழிப்பறி கொலை கொள்ளை சட்ட ஒழுங்கு சீர்கேடு என்று ஒட்டுமொத்ததீய சக்தி கூடாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாநாடு என்பதை நாடறியும் அதனால் ராமேஸ்வரத்தில் குடிகொண்டுள்ள ராமநாத ஸ்வாமியும் மதுரையில் குடிகொண்டுள்ள அங்கையர் கன்னி அருளோடும் எம்ஜிஆர் அம்மா அருளாசியோடும் மீண்டும் முதலமைச்சராக ஆவார் எடப்பாடி யார் அவர்கள் எளிய மக்களுக்கு தொண்டு செய்வார் இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/