ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அகவலம் கிராமத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அகவலம் திமுகவை சார்ந்த கவுன்சிலர் கிருஷ்ணவேணி வெங்கடேசன் தலைமையில் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அகவலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா மார்க்கண்டேயன், மீரா விநாயகம், செல்வா, குமரேஷ், அருண் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக