திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காட்டுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுங்காவூர் அம்பேத்கார் நகர் 3-வது தெருவில் வசிக்கும் பாரதி க/பெ மணி, குமரன் த/பெ மணி, செல்வி க/பெ கணபதி ஆகிய 3 நபர்கள் மீது சிறுங்காவூர் அம்பேத்கர் நகர் 4-வது தெருவை சேர்ந்த பத்மா, பத்மா மகன் ஹரிகிருஷ்ணன் மற்றும் ஹரிகிருஷ்ணன் மனைவி ஆகிய மூன்று பேரும் உருட்டு கட்டை, பைப் ராடு போன்ற ஆயுதங்களுடன் பாரதி, குமரன், செல்வி ஆகியோரை தாக்கினர்.
இதனால் பலத்த காயங்கள் ஏற்பட்டு 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் பத்மா, ஹரிகிருஷ்ணன் மற்றும் ஹரிகிருஷ்ணன் மனைவி ஆகியோரை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக