பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காட்டுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுங்காவூர் அம்பேத்கார் நகர் 3-வது தெருவில் வசிக்கும் பாரதி க/பெ மணி, குமரன் த/பெ மணி, செல்வி க/பெ கணபதி ஆகிய 3 நபர்கள் மீது சிறுங்காவூர் அம்பேத்கர் நகர் 4-வது தெருவை சேர்ந்த பத்மா, பத்மா மகன் ஹரிகிருஷ்ணன் மற்றும் ஹரிகிருஷ்ணன் மனைவி ஆகிய மூன்று பேரும் உருட்டு கட்டை, பைப் ராடு போன்ற ஆயுதங்களுடன் பாரதி, குமரன், செல்வி ஆகியோரை தாக்கினர். 


இதனால் பலத்த காயங்கள் ஏற்பட்டு 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் பத்மா, ஹரிகிருஷ்ணன் மற்றும் ஹரிகிருஷ்ணன் மனைவி ஆகியோரை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/