மானாமரையில் சுதந்திர தின விழாவை கொண்டாடிய காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

மானாமரையில் சுதந்திர தின விழாவை கொண்டாடிய காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி காங்கிரஸ் நகர் கழக அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இந்திய தேசிய கொடியை ஏற்றி வீர வணக்கம் செலுத்தினர். 


உடன் காங்கிரஸ் நகர் தலைவர் திரு கணேசன் அவர்களும் நகராட்சி துணை தலைவர் திரு சுந்தர் அவர்களும் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரலாக கலந்துகொண்டு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/