சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் பூலாங்குடி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாமினை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு சுப. மதியரசன், வட்டார மருத்துவ அலுவலர், திமுக ஒன்றிய செயலாளர்கள் திரு செல்வராஜ், தமிழ்மாறன், ஊராட்சி மன்ற தலைவர்களும், மருத்துவத் துறை அதிகாரிகளும், மருத்துவர்களும், ஊர் பொதுமக்களும் பயனாளிகளும், திமுக கட்சி நிர்வாகிகளும் பெருமளவில் கலந்துக்கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக