திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மாரிமுத்துவை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மாரிமுத்துவை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம், பாரத ஸ்டேட் வங்கி எதிரில் இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்துவை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் செல்வம் தலைமை தாங்கினார். 


இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் ஏழை எளிய மக்களின் உயிரை கிள்ளுகிரையாக நினைத்து பல லட்ச ரூபாய் கையூட்டு வாங்கி போலி மருத்துவமனைகளையும் போலி மருத்துவ சான்றிதழ்களையும் வழங்கி போலி மருத்துவர்களை உருவாக்கியது. சலவை பணியாளர்களை நியமனம் செய்ததில் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு அரசுக்கு தலை குனிவை ஏற்படுத்தியது.


திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு சலவை பணியாளர்களை வாணியம்பாடியில் தேர்வு செய்ய வந்த பெண்ணையே தேர்வு செய்ய வைத்த மர்மம் என்ன? அந்த பெண் யார்? அப்பெண்ணுக்கு அதிகாரம் கொடுத்தது யார் ? அரசு அதிகாரியா? அல்லது அவர் சலவை பணியாளர் சமுதாயத்தை சார்ந்தவரா இது போல இன்னும் பல முறைகேடுகள் நடப்பதை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ரமேஷ், மாநில பிரச்சார அணி செயலாளர் ஆம்பூர் குமரன், மாணவரணி செயலாளர் கோபி, மாநில செயலாளர் கமலகண்ணன், மாநில செயலாளர் நாமக்கல் கிருஷ்ணசாமி, நாமக்கல் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ரமேஷ், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் அன்பரசு மற்றும் 50க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/