காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் மலர்விழி தமிழ்அமுதன் ஒன்றியக் குழு உறுப்பினர் நிதியிலிருந்து ஆதனூரில் உள்ள ஜவகரய்யாநகர் 1வது பிரதான சாலையை சீரமைக்க ரூ.13,50,000/- மதிப்பீட்டில் சுமார் 200 மீட்டர் அளவிற்கு சிமெண்ட் சாலை அமைக்க, குன்றத்தூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.
இதில், மாவட்ட குழு உறுப்பினர் அமுதா செல்வம், குன்றத்தூர் ஒன்றியக் குழு துணைத்தலைவர் உமாமகேஸ்வரி வந்தேமாதரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் மற்றும் ஸ்ரீதேவி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்விரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக