நீலகிரி மாவட்டம் உதகை நகர திமுக சார்பில் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா. முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, உதகை நகர திமுக சார்பில், நகர செயலாளர் ஜார்ஜ் அவர்கள் தலைமையில் உதகை காந்தல் சிலேட்டர் ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், ஆ.இராசா எம்.பி., அவர்கள் கலந்துகொண்டு,
மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கழக கொடியேற்றி, நூற்றாண்டு விழா கல்வெட்டை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, உதகை நகரமன்ற உறுப்பினர்கள் தம்பி இஸ்மாயில், எல்கில் ரவி, செல்வராஜ் ரீட்டாமேரி, பிரியா வினோதினி, மேரி பிளோரீனா, திவ்யா, உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக