சேத்தியாத்தோப்பு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் பாய்ந்தது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

சேத்தியாத்தோப்பு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் பாய்ந்தது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணம் பகுதியில் இருந்து வடலூர் நோக்கி  மரத்தூள் ஏற்றிய சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சரக்கு வாகனம் திடீரென ஓட்டுனரின்  கட்டுப்பாட்டை இழந்து அருகில் செல்லும் வடக்கு ராஜன் வாய்க்காலில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. 


இதில் ஓட்டுநர் மற்றும் லாரியில் இருந்த மற்றொருவர்  லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தான் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இப்பகுதிகளில் சாலையின் இருபுறமும் இரும்பு விபத்து தடுப்புப் பட்டைகள் அமைத்தால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதை ஓரளவுக்காவது தடுக்கலாம் என்பதே இப்பகுதி மக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள் இவர்கள்  கருத்தாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/