தூத்துக்குடி - ஸ்ரீவைகுண்டம், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி - ஸ்ரீவைகுண்டம், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் மற்றும் போலீசார் நேற்று (14.08.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் கே.டி.கே நகர், கணியன் காலனி அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் இசக்கிமுத்து (20) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.



உடனே மேற்படி போலீசார் இசக்கிமுத்துவை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட இசக்கிமுத்து மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

#End 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/