பொன்னமராவதி பேரூராட்சியில் தேசியக் கொடியையேற்றிவைத்தர் பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

பொன்னமராவதி பேரூராட்சியில் தேசியக் கொடியையேற்றிவைத்தர் பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன்.

புதுகோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேரூராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்திற்கு பேரூராட்சித்தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.

செயல் அலுவலர் மு.செ.கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். பின்பு பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் தேசியக் கொடியையேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். மேலும் பொன்னமராவதி பேரூராட்சி சார்பில் மகாத்மா காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் நாகராஜன், மகேஸ்வரி, புவனேஸ்வரி, சிவகாமி, முத்துலெட்சுமி, இஷா, சாந்தி, அடக்கி, ராமநாதன், ராஜா, திருஞானம்,ரவி, சந்திரா, பேரூராட்சி பணியாளர்கள் கேசவன், ஆரோக்கிய அன்பழகன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பழனிச்சாமி, க்ரீன் சர்வீசஸ் வினோத், சதீஸ், பரப்புரையாளர்கள் சங்கீதா, சம்பூர்ணப்ரியா, நாகேஸ்வரி, பாபு, ராமன், ரவி, ரவிக்குமார் தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள், டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/