வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நேதாஜி சவுக் அருகே பேர்ணாம்பட்டு ரோட்டில் இருசக்கர வாகன தணிக்கை சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர்களை மடக்கி விசாரித்த போது முன்னுக்குப் புறனாக பதில் அளித்தனர். அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலம் வைத்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக டிஎஸ்பி ராமமூர்த்தி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவருடைய உத்தரின் பெயரில் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் இரண்டு இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர்.
அந்த இளைஞர்களை விசாரித்த போது குடியாத்தம் புத்தர் நகரை சேர்ந்த நாகேந்திரன் (எ) நாகராஜ் (வயது 23) வாணியம்பாடியை சேர்ந்த பிரசாந்த் (வயது 23 ) இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த பொழுது அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக